tamilnadu

img

கொரோனா ஊரடங்கு இழப்பு ரூ.29,000 கோடி

கேரள திட்டக்குழு மதிப்பீடு

திருவனந்தபுரம், மே 5- கொரோனா ஊரடங்கால் கேர ளத்துக்கு ரூ.29 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது இந்த கால அளவிலான பொருளாதார மொத்த வளர்ச்சியில் 80 சதவிகித குறைவு என்பது அம்மாநில திட் டக்குழுவின் மதிப்பீட்டில் தெரிய வந்துள்ளது. ஊரடங்கின் தொடக்க மான மார்ச் மாதத்தின் 10 நாட்கள், ஏப்ரல் மற்றும் மே 3 ஆம் தேதி வரை ஏற்பட்ட இழப்பு இதற்கான கால அளவாகும். இந்த அறிக்கை முதல் வர் பினராயி விஜயனிடம் சமர்ப் பிக்கப்பட்டது.

தோட்டம் உள்ளிட்ட வேளாண் துறையில் மொத்த இழப்பு ரூ. 1570.75 கோடியாகும். விவசாய தொழிலாளர்களின் ஊதிய இழப்பு ரூ.200.30 கோடி. நெல் சாகுபடியில் ரூ.15 கோடி. ஜூனில் தொடங்க வேண்டிய பருவமழை சாகுபடியும் கவலையளிப்பதாக உள்ளது. காய்கறி உற்பத்தியில் மொத்த இழப்பு ரூ.147 கோடி. ஏற்றுமதி 40 சதவிகிதம் குறைந்துவிட்டது. பழம், கிழங்கு வகைகள், முந்திரி போன்றவற்றில் ரூ.141 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத் துறையில் ரூ.181 கோடி இழப்பு. மீன் வளத்துறை யில் மொத்த இழப்பு ரூ.1371 கோடி யாகும். இந்த கால அளவில் 41,664 மெட்ரிக் டன் மீன் சேகரிப்பு தடை பட்டது. 16,000 மெட்ரிக் டன் ஏற்று மதியும் தடைப்பட்டது.

தொழில் துறை உற்பத்தி இழப்பு ரூ .8,000 கோடிக்கும் அதிகம் என்று கணிக்கப்பட்டுள்ளது. சுயதொழில், தற்காலிக தொழி லாளிகளுக்கான வருவாயில் ரூ.350 கோடி இழப்பு. ஓட்டல், தங் கும் விடுதி போன்ற வணிகத்துறை யில் ரூ.17,000 கோடி. பாரம்பரிய தொழில்கள் போன்றவற்றில் 35.2 லட்சம் சாதாரண தொழிலாளர் களுக்கு முழுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சுற்றுலாத் துறையி்ல் மார்ச் முதல் செப்டம்பர் வரை பின்னடை வுதான். உல்லாச பயணத்தில் முக் கிய பங்கு வகிக்கும் நாட்கள் கடும் நெருக்கடியில் உள்ளன. இதில் தற்போது வரையிலான இழப்பு ரூ.20,000 கோடி. சாலைப் போக்கு வரத்து துறையில் தினசரி வரு வாய் இழப்பு ரூ.241 கோடிக்கும் அதிகம். தகவல் தொழில்நுட்பத் துறையில் தினமும் 26,200 வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. அதைச் சார்ந்த தினமும் 80,000 வேலை நாட் களும் இழப்பாகும். கேஎஸ்இபிக்கு ரூ.210 கோடி வருவாய் இழப்பு ஏற் படும். தொழில்துறை, வணிக நிறு வன பயனர்களிடமிருந்து ஏற்படும் வருவாய் இழப்பாகும் இது.  தோட்டம் துறையின் கூலி வரு வாய் ரூ.80 கோடி குறையும். ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.15 கோடியும், வெளிநாடுவாழ்வோர் மூலம் ஏற்படும் வருவாய் இழப்பும் கணக்கிடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.